பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பகத் மற்றும் மான்ஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சுவட்சர்லாந்தின் பேசில் நகரில் பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஆண்களில் பிரிவில் சிங்கிள்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் இங்கிலாந்தின் பெத்தலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். அத்துடன் இவர் இரட்டையர் பிரிவில் மனோஜ் சர்க்காருடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதேபோல பெண்கள் பிரிவு பாரா பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மான்ஷி ஜோஷி மற்றொரு இந்திய வீராங்கனையான பார்மாரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் கடந்த 2011ஆம் நடைபெற்ற விபத்தில் தனது காலை இழந்துள்ளார். அதன்பின்னர் பாரா பேட்மின்டன் பிரிவில் பங்கேற்று வருகிறார். இந்தச் சூழலில் இவர் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கெனவே மகளிர் பிரிவு பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?