சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐந்து பாடங்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக செலுத்தி வந்த பட்டியலின மாணவர்கள் இனி ஆயிரத்து 200 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து பாடங்களுக்கு 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி வந்த மாணவர்கள் இனி 1500 ரூபாய் செலுத்தவேண்டும்.
12ம் வகுப்பு தேர்வில் கூடுதல் பாடம் தேர்வு எழுதுவதற்கு பட்டியலின மாணவர்கள் இதுவரை கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மாற்றி 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பொதுப்பிரிவினர் செலுத்தி வந்த 150 ரூபாய் கட்டணமும் 300 ரூபாய் என இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறுவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாததால் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Loading More post
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?