தமிழகத் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ திமுக, அமமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது நகைச்சுவையானது. தேனியில் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளளதால் தில்லு முல்லு நடக்க வாய்ப்புள்ளது. எனவே தில்லுமுல்லுவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், “ மே 23 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆட்சியை கலைக்க திமுக எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம். அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக ஆதரவு தரவில்லையென்றால் அவர்கள் எங்களை பார்த்து பயந்து விட்டார்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்திருந்தார்.
Loading More post
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்
அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!