10 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர், குற்றவாளிகள் இல்லை என்பது தற்போது நிரூபணமானதால் தண்டனை திரும்ப பெறப்பட்டு, வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 2003-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்டது, கொள்ளை மற்றும் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய வழக்கில் பழங்குடியினர் 6 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட போது 2009-ஆம் ஆண்டு 6 பேருக்கும் மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்து, இதில் தொடர்பே இல்லாத 6 பேரை காவல்துறையினர் வழக்கில் சிக்க வைத்தது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து 6 பேருக்கும் விதித்த மரண தண்டனையை திரும்பப்பெற்ற உச்சநீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்த 6 பேருக்கும் , மகாராஷ்டிரா அரசு 4 வாரங்களுக்குள் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் அப்பாவி பழங்குடியின மக்களை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!