யுத்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜுரணிக்கமுடியாத குற்றத்துக்காக அஸ்சாத் அரசு 302 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் யுத்த களங்களில் தன் பாதங்களை பதித்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் பத்திரிகையாளர் மேரி கால்வின். அமெரிக்காவில் பிறந்த கால்வின் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார். எத்தனையோ நாடுகளுக்கு சென்று போரின் கோரத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வந்த கால்வின் சிரியாவில் நடந்த போரினைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தபோது 2012ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
சிரியாவின் ஹொம்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கால்வினும், புகைப்பட கலைஞர் ரெமியும் கொல்லப்பட்டனர். சிரியாவின் மக்களுக்கு எதிராக போர் நடத்திய அதிபர் அல்-அஸ்சாத்ன் படைகள் தான் கால்வினை குறி வைத்து கொலை செய்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் கால்வின் விபத்தில் இறந்ததாக சிரிய அரசு தெரிவித்தது. கால்வினின் இறப்பு தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஏமி பெர்மான் ஜாக்சன் தீர்ப்பளித்துள்ளார். அதில் கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஜுரணிக்கமுடியாத குற்றத்துக்காக அஸ்சாத் அரசு 302 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ள அவர், கால்வின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் கால்வினின் சகோதரிக்கு ரூ. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கால்வினின் சகோதரி, என் சகோதரி இறந்து 7 வருடங்கள் ஆனாலும், அவளின் நினைவு இல்லாமல் என் ஒருநாளும் கழிந்தது இல்லை. அபராதமாக வாங்கப்படும் பணம் சிரியாவின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக்கொண்டு இருந்த போது செய்தி சேகரிக்கச் சென்ற கால்வின் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் கால்வினின் இடது கண் பாதிக்கப்பட்டது. கால்வினின் வாழ்க்கையை மையமாக வைத்து தி பிரைவேட் வார்' என்ற திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை