சர்வதேச தடைகளை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டியிருக்கும் என அமெரிக்காவுக்கு, வடகொரியா திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை, சிங்கப்பூரில் சந்தித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையில் ஈடுபட்டார். சந்திப்புக்குப் பின், கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டார்.
மேலும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களையும் முழுமையாக கைவிடுவதற்கும் முன் வந்தார். அதற்கு பிரதிபலனாக வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என அமெரிக்காவை அவர் கேட்டுக் கொண்டார். எனினும், அந்தத் தடை எப்போது நீக்கப்படும், அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்த விவரங்களை ட்ரம்ப் இதுவரை அறிவிக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள வடகொரியா, சர்வதேச தடைகளை விரைந்து நீக்காவிட்டால், மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டியிருக்கும் என அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின் முதல் முறையாக எச்சரித்துள்ளது. வெறுமனே அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு அடிபணிவதற்காக கூடுதல் அழுத்தங்களை கொடுப்பதும் ஒருபோதும் பலன் தராது என்றும் வடகொரிய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?