மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதிலும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார்.
Read Also -> ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ - பரப்புரையை தொடங்கிவைத்த முதலமைச்சர்
Read Also -> நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர்
இதேபோல் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்தினர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி