திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பனியன் தொழிலாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் லூர்து சேவியர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை தர மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
சாதாராணமாக எடுத்துக் கொண்ட லூர்து சேவியர், தொடர்ந்து மிரட்டல் வந்ததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மிரட்டல் வந்த அலைபேசி எண்ணை வைத்துக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், லூர்து சேவியை மிரட்டியது அவரிடம் பணிபுரியும் வசந்த் மற்றும் பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் பணம் கேட்டு மிரட்டியதாக ஒப்புக்கொண்டதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!