நெல்லையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ்துரை மரணத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், ஜெகதீஷ்துரை கொலையில் சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படையும், 2 உட்கோட்ட காவல் ஆய்வாளர்களையும் விசாரணைக்கு நியமித்துள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக, தன்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றதாக, காவலர் ஜெகதீஷனின் மனைவி சந்தேகம் எழுப்பினார். 5 காவலர்கள் இருக்கையில் தன்னுடைய கணவரை மட்டும் தனியாக மணல் கொள்ளையர்களை பிடிக்க அனுப்பியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காவலர் ஜெகதீசனின் உறவினர்களும் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர்.
Loading More post
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் மீண்டும் கைகொடுக்க வாய்ப்பு
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
கொரோனா 2ஆம் அலை தீவிரம்; ப்ளஸ் 2, கல்லூரி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
"நாள் ஒன்றுக்கு 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்” - சென்னை காவல் ஆணையர்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்