சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை என்.என் கார்டன் தெருவில் உள்ள டீக்கடையில் வாடிக்கையாளர்களை ஆசை வார்த்தை காட்டி கிரிக்கெட் சூதாட்டம் ஆட அழைப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தபோது, சூதாட்டத்தின் செயல்பாடுகளை போலீசார் கண்டறிந்தனர்.
வாட்ஸ் ஆப் மூலம் கிரிக்கெட் அணிகளின் பெயரில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் பெயரில் பணம் கட்டுபவருக்கு, அவர் சொல்லும் அணி வெற்றி பெற்றால் அவர் கட்டும் பணத்துக்கு இரண்டு மடங்கு பணம் அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும். இதுதான் சூதாட்டத்தின் விதி. அதாவது சென்னை அணியின் மீது ஒருவர் 4,000 கட்டிவிட்டு அந்த அணி ஜெயித்தால் அவருக்கு 8,000 ரூபாய் கிடைக்கும். இப்படி சொல்லித்தான் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் தங்கள் குழுமத்திற்கு ஆள் சேர்த்துள்ளனர். இதனையடுத்து டீக்கடையில் வைத்து சூதாட்டம் ஆடிய பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஷெரீப், அவரது மகன் சையது அபுதாகிர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ரொக்கம் ரூ.13 ஆயிரத்து 500 மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுடன் சூதாட்டத்தில் பங்கேற்ற நபர்கள் யார் யார்..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான தந்தை மகன் இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சென்னை நகரில் புதிதாக முளைத்துள்ள இந்த கிரிக்கெட் சூதாட்டம் வேறு எங்கெல்லாம் நடக்கிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?