ஹைதராபாத்தில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் தனது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் சவுமியா என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசிந்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் தனது இல்லத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, இச்சம்பவம் தொடர்பாக நள்ளிரவில் அவரது உறவினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் தற்கொலை போல் தெரியவில்லை.வீடு வெளிப் பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலில் தீக்காயங்களை தவிர்த்து பிறகாயங்களும் உள்ளது. கதவை வெளிப்பக்கமாக யார் தாழிட்டது என்பது குறித்து தெரியவில்லை. சம்பவம் நடந்தபோது அவரது கணவர் வீட்டில் இல்லை. அவர் இரவு 8.30 மணியளவில் பணி நிமிர்த்தமாக வெளியில் சென்றுள்ளார்.ஆனால் இந்தச்சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம் விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும் எனக் கூறினர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை