குழந்தை பெற்ற பிறகு மரணத்தின் விளிம்புவரை சென்று வந்ததாக டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
டென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது மகள் ஒலிம்பியாவுடன் வோக் இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பிறகு உடலில் ரத்தக் கட்டிகள் உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் எந்தப் பிரச்னையும் இல்லை என மருத்துவர்கள் கருதியதாகவும் பின்னர் உடல்நிலை மோசமானதால் சி.டி. ஸ்கேன் மூலம் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் செரீனா கூறியுள்ளார்.
தனது வேண்கோளின்படி சி.டி.ஸ்கேன் எடுக்கப்படாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் பிரசவத்துக்குப் பிறகு கறுப்பினப் பெண்களின் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்