ஸ்மார்ட் சிட்டி நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மிகக் குறைந்த நிதியைக் கூட தமிழக அரசு செலவு செய்யவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வீட்டு மற்றும் நகர்ப்புற அமைச்சரவை தாக்கல் செய்த அறிக்கையில், மற்ற மாநிலங்களைவிட குறைவான நிதியைத்தான் தமிழக அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க கடந்தாண்டு மத்திய அரசு ஒதுக்கிய 196 கோடி ரூபாயில் இருந்து ஒரு விழுக்காடு கூட தமிழக அரசு செலவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மட்டும் அதிகபட்சமாக 7 கோடியே 27 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாகவும், சேலம் மிகக் குறைவாக 5 லட்சம் ரூபாயை மட்டுமே செலவு செய்துள்ளாதகவும் குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி 3 கோடியே 82 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை