திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிரைக்கண்டு மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் மாவட்டம் பெரிய கொருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தட்சிணாமூர்த்தி. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி மேற்கொண்டு வந்தார். வடகிழக்கு பருவமழையால் வயலில் தேங்கிய தண்ணீர் வடியாததால் பயிர்கள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி விவசாயி தட்சிணாமூர்த்தி பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
அப்போது அவரது மகன் முருகானந்தம் தந்தையை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தட்சணாமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!