பைனான்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆசிப் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் ஆசிப் அகமது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் பைனான்சியர் கோதண்டராமன். இவர் 5 கோடி ரூபாய் கடனை திரும்ப கேட்டதற்காக, ஆசிப் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் ஆசிப் அகமது தன்னை ஆள் வைத்து தாக்கியதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஆசிப் அகமது மீது கொலை முயற்சி, பண மோசடி ஆகிய வழக்குகள் பதியப்பட்டன. இதில் கொலை முயற்சி வழக்கில் ஆசிப் முன் ஜாமின் பெற்றார். இருப்பினும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 17ஆவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை காவல் துறையினர் ஆசிப்பை கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கு விசாரணை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பைனான்சியர் கோதண்டராமன் வழக்கை திரும்ப பெற கோரி, ஆசிப் அகமது தரப்பிலிருந்து தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக குற்றம் சாட்டினார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ