தருமபுரி மாவட்டம் இருமத்தூரில் அரசு மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
தருமபுரி - வேலூர் செல்லும் பிரதான சாலையில் இருமத்தூர் அமைந்துள்ளது. இந்த ஊரை மையமாக வைத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவால் இந்த பகுதியில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் இருமத்தூரில் உள்ள ஒரு கோழி இறைச்சி கடை மற்றும் ஒரு சில வீடுகளில் அதிகாலை முதலே கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மதுபாட்டில்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி, மஞ்சமேடு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக்கிலிருந்து வாங்கி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே ஒவ்வொரு நாளும் 500 மதுபட்டில்களுக்கு மேலாக விற்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!