காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது.
கம்போடியாவில் கடந்த 4 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதரின் உடல், விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதரின் வீடு உள்ள திருப்பருத்திக்குன்றம் செல்லும் அனைத்து வழிகளும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. சோதனைக்கு பிறகே வாகனங்கள் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசால் தேடப்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து துபாய் சென்று பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இதனிடையே அவரது 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியது. இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கடந்த அக். 4 ஆம் தேதி காவல்துறை அறிவித்தது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'