திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். சாமி தரிசனம் செய்து ஒரே பந்தியில் உணவருந்திய அவர்கள், ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினர்.
இதில், அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையே பிரதானமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் பிளவுபட்ட அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாஃபா பாண்டியராஜன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தார்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி