சிறைகளில் செல்போன் புழக்கத்தைத் தடுக்க செல்ஜாமர் கருவி பொருத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து 43 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
2015 -ம் ஆண்டில் 763 செல்போன்களும், 461 சிம்கார்டுகளும், 2016-ம் ஆண்டு 280 செல்போன்களும், 200 சிம்கார்டுகளும் சிறைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சிறைகளில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தாலும் கூட அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையில், தமிழக சிறைகளில் முதல் முறையாக செல்ஜாமர் கருவி பொருத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் மொத்தமாக 12 செல்ஜாமர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. புழல் சிறையில் 3 செல்ஜாமர் கருவிகளும், கோவை மத்திய சிறையில் 2 செல்ஜாமர் கருவிகளும், எஞ்சிய 7 செல்ஜாமர் கருவிகள் பிற மத்திய சிறைசாலைகளிலும் பொருத்தப்படும் என்றும், இவை வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!