மிசாவில் கைதானதற்கான காரணத்தை தெரிவித்திருக்கலாமே? எதற்கு ஆர்ப்பாட்டம் என்று அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவு படுத்தியதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சருக்கு எதிராக போராட்டங்கள் வேண்டாமென ஸ்டாலினும் நிர்வாகிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்த விவகாரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் வரலாற்றில் முக்கியமான விஷயம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது. மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு எழுந்த சந்தேகத்தை முன் வைத்தேன்.
இதற்காகதான் ஸ்டாலின் தான் கைது செய்யப்பட்டார் என்பதை தெரியப்படுத்தி இருக்கலாமே, பின் எதற்கு ஆர்ப்பாட்டம்.என்னை பற்றி திமுக கூறிய கருத்து மற்றும் அனைத்திற்கும் 2 நாட்களில் அதிமுக பதிலளிக்கும்” என கூறியுள்ளார்.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்