நடிகர் தனுஷை தங்களது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
கதிரேசன் - மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கோரி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இவரது மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மதுரை தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்தனர். அதில் தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போலியானது என்று கூறி தாங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கை கேரளா அல்லது கர்நாடக மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நான்கு வார காலத்திற்கு விசாரணையை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்