நண்பர் வைத்த போட்டியில் 41 முட்டைகளை தின்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் (42). இவர் தனது நண்பருடன் பிபிகஞ்ச் மார்க்கெட்டுக்கு நேற்று சென்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ’50 முட்டைகளை உடனடியாகச் சாப்பிட முடியுமா?’ என்று கேட்டார் நண்பர். ’ஏன் முடியாது?’ என்றார் சுபாஷ். ’சவாலா?’ என்றார் நண்பர். ’ம்’ என்றார், அவர். 50 முட்டைகளை தின்றால் இரண்டாயிரம் ரூபாய் பெட் என்று முடிவு செய்தார்கள்.
பிறகு ஒவ்வொரு முட்டையாக உடைத்து வாயில் ஊற்றினார் சுபாஷ். 41-வது முட்டையை உடைத்து உள்ளே தள்ளிய சுபாஷூக்கு அதற்கு பிறகு தலை சுற்றுவது போல இருந்தது. 42 வது முட்டையை உடைத்து வாயில் ஊற்றும்போது தடுமாறி பொத்தென்று விழுந்தார். சுயநினைவில்லை. பதற்றமான நண்பர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சுபாஷைத் தூக்கிச் சென்றனர். அவர்கள், வேறு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லுமாறு கூறினர். கொண்டு சென்றனர். சில மணி நேரங்களிலேயே சுபாஷ் அங்கு உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!