7 பசுக்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்து வன்புணர்ச்சி செய்த கொடூரன் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஃபைஸாபாத் நகரத்தில் உள்ள கர்தாலியா பாபா ஆசரமத்தில் ஏராளமான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆசரமத்தில் உள்ள பசுக்களை மர்ம நபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். யாருக்கு தெரியாமல் ஆசமரத்தின் பசுப் பண்ணைக்குள் நுழைந்த அந்த நபர் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை செய்துவிட்டு வெளியேறுவது, பின்னர் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆசரமத்தில் இருந்த சேவையாளர்கள், அந்த நபரை பிடிக்க திட்டமிட்டனர். அவர்கள் அனைவரும் மறைந்துகொண்டு தினமும் கண்காணித்துள்ளனர். ஒருநாள் அவர்கள் நினைத்துபோலவே அந்த மர்ம நபர் வந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் பசுப்பண்ணைக்கு சென்ற அவர் பசுக்களை பாலியல் தொல்லை செய்துள்ளார்.
அப்போது அந்த நபரை மடக்கிப் பிடித்த ஆசரமத்தினர், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்