துரைமுருகன் மற்றும் நடிகை குஷ்பு ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி கடந்த 19 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர் தொகுதியில் முறைகேடு புகார் காரணமாக தேர்தல் ஆணையத்தால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பெரும்பான்மையான இடங்களை மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் திமுகவும் கைப்பற்ற உள்ளன.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துரைமுருகன், மீண்டும் இம்முறை சீறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான குஷ்புவும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை தொலைக்காட்சிகளில் என்னை நீங்கள் பார்க்க இயலாது. ஏனென்றால் நான் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளேன். இதனால் நாளை நடக்கும் கூத்துக்களை என்னால் பார்க்க முடியாது. சில விஷயங்களை நான் திட்டமிட்டிருந்தேன், ஆனால் இயற்கை அதை நிராகரித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!