Published : 24,Jul 2017 02:15 AM
பதற்றத்தில் பறிகொடுத்த இந்தியா: கனவைத் தகர்த்த அன்யா!

மகளிர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் அன்யா ஸ்ருப்சோல் 6 விக்கெட் எடுத்து இந்திய அணியின் கனவைத் தகர்த்தார்.
லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்
இழப்புக்கு 191 ரன்கள் என்ற நிலையில் வலுவாக இருந்த இந்திய அணி, கடைசி 8 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு இழந்தது. கடைசி கட்ட விக்கெட்டுகள் பதற்றத்திலேயே விழுந்தது.
இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து வீராங்கனை அன்யா ஸ்ருப்சோல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர், மந்தனா (0), பூனம் (86), வேதா கிருஷ்ணமூர்த்தி (35), தீப்தி ஷர்மா (14),
கோஸ்வாமி (0) ராஜேஸ்வரி கெய்க்வாட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் கனவைத் தகர்த்தார்.