திண்டுக்கல் அருகே வீட்டில் பதுங்கி இருந்த கஞ்சா வியாபாரியை எஸ்.பி தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் 2 இருசக்கர வாகனங்கள் ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டி. இவர் மீது ஏற்கெனவே கஞ்சா கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவரை திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் சௌந்தரபாண்டி தனது கூட்டாளிகளுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை சுற்றிவளைத்த தனிப்படை போலீசார் சௌந்திரபாண்டி உள்ளிட்ட 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் ரூபாய் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்