ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு வருகிற 9ஆம் தேதியும், காளைகளுக்கான முன்பதிவு 11ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருகிற 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றன. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், முன்பதிவில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், உதவியாளர்கள் தங்களது மூன்று புகைப்படம் மற்றும் ஆதார் நகல்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கொரோனோ பரிசோதனை நடைபெறும். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொரோனோ பரிசோதனை முகாம் நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கொரோனோ பரிசோதனை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி