ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில், 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாத், தாமோதரன், கிருஷ்ணசாமி மற்றும் முருகசாமி. இதில் தாமோதரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் நான்கு பேரும் ஜவுளித்தொழில் செய்து வந்த நிலையில், ஜவுளிக்கான நூல் வாங்க கரூர் பகுதிக்குச் செல்வது வழக்கம் எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்றும் பிற்பகலில் நூல் வாங்குவதற்காக கரூர் பகுதிக்கு கார் மார்க்கமாகச் சென்றுள்ளனர்.
காரானது கொடுமுடி அருகே உள்ள பள்ளக்காட்டூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலுள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!