கள்ளக்குறிச்சியில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் முதியவரின் கைவிரலை விவசாயி கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருபாகரன். இவரது தந்தை கலியதுரை நேற்று முன்தினம் இயற்கை உபாதைக்காக, அதே ஊரை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டை கடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகம் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கலியதுரை வலது கையின் நடுவிரலை கடித்து துப்பியுள்ளார். அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையே படுகாயமடைந்த கலியதுரை சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கலியதுரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரின் மகன் கிருபாகரன் அளித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்