கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு சார்பாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், இதுவரை இல்லாத கனமழை மற்றும் வெள்ளத்தால் ஹைதராபாத் மற்றும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் தெலங்கானா அரசு மற்றும் மக்களுடன் தமிழக மக்கள் துணை நிற்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு கொடுக்கும் ஆதரவுக்கு அடையாளமாக ரூ.10 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இந்த தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தெலங்கானாவுக்கு உதவிய தமிழகத்துக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்