ஐபிஎல் தொடரில் தான் முறியடிக்க விரும்பும் சாதனை எது ? என டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி (சனிக்கிழமை அன்று) அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே 2வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் களம் காணுகின்றன.
இந்நிலையில் பேட்டியளித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம், தாங்கள் ஐபிஎல் போட்டியில் முறியடிக்க விரும்பும் சாதனை எது ? என்ற கேள்வி முன்வைகப்பட்டது. அதற்கு பதிலளித்தத ஸ்ரேயாஸ், “ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்” என்ற சாதனையை படைக்க விரும்புவதாக தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்றிருக்கும் 12 ஐபிஎல் தொடர்களிலும் கோப்பை வென்ற அணிகள் உட்பட எந்த அணியும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!