ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தத் தொடரை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர். முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்த பட்லர், நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 77 ரன்கள் விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காத அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் அவர் 3வது டி20 போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. எனவே அவர் பயோ-பாதுகாப்பு வளையத்திலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. இதனால் பட்லர் தனது குடும்பத்துடன் அடுத்த சில நாட்களை செலவிட உள்ளார்.
பயோ-பாதுகாப்பு வளையம் என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கொண்டு வரப்பட்டிருக்கும் தற்காலிக முறையாகும். இந்த முறைப்படி போட்டிக்குப் பின்னர் ஒரு கிரிக்கெட் வீரர் மற்ற வீரர்களுடனோ அல்லது வேறு யாருடனோ தொடர்பில் இல்லாமல் தனித்து இருப்பார்கள். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவல் இல்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!