கொரோனா தொற்றை தடுக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முகக்கவசம் அணிவதும் அவசியம் என அறிவுறுத்தியது உலக பொது சுகாதார மையம். அதனை இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் விதியாகவே அறிவித்து மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இருப்பினும் சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் அப்படி செய்பவர்களிடம் இந்தியாவில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த அபராத முறை பின்பற்றப்பட்டு வரும் சூழலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புனேவில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் எச்சில் துப்பியவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது புனே மாவட்ட நிர்வாகம்.
புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கின் ஆணைக்கு இணங்க போலீசார் கொள்ளை நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காதவர்களிடமிருந்து அபராத தொகையை வசூலித்துள்ளனர்.
ஹவேலி மற்றும் இந்தாபூர் பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகளவில் அரசின் விதியை பின்பற்றாதமைக்காக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்