சிறு வயதில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ந்தபின் மாரடைப்பால் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்கள் ஆஸ்துமா பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறு வயதில் ஆஸ்துமா ஏற்படும் பலரும், வளர்ந்த பின், எளிதாக இதய செயலிழப்புக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று கூறி உள்ளது. ஆஸ்துமா வளரும் பருவத்தில் ஏற்படுவதால், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களின் வளர்ச்சி, இயங்குதிறனில் பாதிப்பை நிகழ்த்துகிறது. இதன்மூலமாக, இதய தசை சுருங்கி விரிவடையும் திறனை இழக்க தொடங்குவதாகவும், முதிர் பருவத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், எளிதில் இதய செயலிழப்பு நிகழ்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இதனை சிறு வயதில் இருந்தே சரிசெய்ய அதிமதுரம், வெங்காயம், தேன் உள்ளிட்டவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அல்லது இது மூன்றையும் சேர்த்து ஜூஸ் செய்து கலந்து குடிப்பதாலும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து படிப்படியாக விடுபடலாம் எனவும் கூறுகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்