சகோதர பந்தத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களின் கையில் 'ராக்கி' கட்டுவது வழக்கம். இந்தியா முழுவதும் இன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ பிரிவின் செவிலியர்கள் மற்றும் குடியரசு மாளிகையின் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையின் செவிலியர்களோடு ரக்ஷாபந்தனைக் கொண்டாடினார்.
‘கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்கள் இரட்சகர்களாக முன்னின்று மக்களை காக்கின்றனர்’ என செவிலியர்களை பாராட்டினார் குடியரசு தலைவர். பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் குடியரசு தலைவர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்