துன்பத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல், அவர்களை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். போராட்டம் மூலம் தங்களது நிலையை உணர்த்த முயற்சிக்கும் அவர்களை மத்திய அரசு அடக்குகிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் தீவிரவாதிகளைப் போல் நடத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே குறைந்தபட்ச ஆதார விலையுடன், உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை விற்க விவசாயிகளுக்கு உரிமை வழங்க ஆவன செய்ய வேண்டும். அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை