கேரளாவில் மேலும் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவியியுள்ளது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரம் பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் 80 ஆயிரம் பேருக்கும், பிற நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா.
இந்தியாவில் மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரளாவில் மேலும் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேருக்கும், கேரளாவில் உள்ள இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது
தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் நான் இறந்துவிட வேண்டுமா"? - தெலங்கானா முதல்வர் காட்டம்
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்