மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்து பேசுகிறார்.
மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் இத்தகவலை தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து பேசியுள்ள நிலையில் இவை குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தில் உள்ள அம்சங்களை இறுதி செய்வது குறித்து சோனியாவும் பவாரும் பேச உள்ளதாக தெரிகிறது.
கூட்டணி அரசில் சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவியை தர மற்ற இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் துணை முதல்வர், சபாநாயகர் உள்ளி்ட்ட பதவிகள் குறித்தும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. சுழற்சி முறையில் தங்களுக்கும் முதல்வர் பதவி தேவை என சிவசேனா கூறிவிட்டதால் பாஜகவுடனான அதன் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்