ராசிபுரம் அருகே புறாவை துரத்திச்சென்ற 10-ம் வகுப்பு மாணவன் 100 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்தான்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ளது புதுப்பாளையம். அப்பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான பெருமாள் என்பவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் கார்த்திக், நேற்று தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது அவ்வழியாக பறந்து சென்ற புறாவை துரத்திச் சென்றுள்ளனர்.
புறா மீது கவனம் வைத்து ஓடிய கார்த்திக் எதிரே கிணறு இருந்ததை கவனிக்காமல் 100 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட சக நண்பர்கள், வீட்டிற்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கிய மாணவனை 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!