சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறுவதே இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் ஒன்றில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்காக போட்டிகளில் விளையாடுவதில்லை. மாறாக எனது நாட்டுக்கு வெற்றியைப் பரிசளிப்பதற்காகவே விளையாடுகிறேன். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெல்வதே எங்கள் இலக்கு. ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை தக்கவைப்பதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.
கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளித்த கோலி, இரு நாடுகள் இடையிலான போட்டி என்பது எப்போதுமே ஆர்வத்தைத் தூண்டுவதாக இருப்பதுண்டு. ஆனால், அதுவும் மற்றொரு போட்டியே என்று தெரிவித்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஜூன் 4ல் சந்திக்கிறது.
Loading More post
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!