ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்திருப்பதும், தமிழக அரசு நிச்சயம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூம் கூறியிருப்பதும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்து விடக்கூடாது என்ற மக்கள் விரோத நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசுடன் அதிமுக அரசு கூட்டணி வைத்துள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார்.
எனவே மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பொதுவிநியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் இத்திட்டத்தில் இணையக்கூடாது என்றும், அவ்வாறு ஒரு முடிவு எடுக்கும் முன்பாக ஜனநாயக ரீதியாகக் கருத்துகளை கேட்கவேண்டும் எனவும் தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!