சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பார்வையில்லாத, ஆதரவற்ற தம்பதிக்கு படுக்கை வழங்காமல் தரையில் பாய் விரித்து படுக்க வைத்திருக்கும் அவலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் கேத்துவர்ப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற தம்பதி முத்து - ஒச்சம்மாள். ஒரே மகனையும், சொத்துக்காக ஊரார் கொலை செய்துவிட்டதாக கூறும், இந்த தம்பதி உணவுக்கு கூட வழியின்றி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அரை மயக்கத்தில் இருந்த அவர்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜசேகரிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் எடுத்துக்கூறினர்.
இதனையடுத்து முதியவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். அங்கு, தம்பதிக்கு படுக்கை வழங்காமல், தரையில் பாய் விரித்து படுக்க வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டீனிடம் கேட்டதற்கு இருவருக்கும் படுக்கை வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!