செல்போனை அணைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்கு அமெரிக்க உணவகம் ஒன்று பீட்சாவை இலவசமாக வழங்குகிறது.
இப்போதெல்லாம் ‘கெட் டூ கெதர்’ வைத்தால் கூட நண்பர்கள் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. கூட்டத்தில் ஒரு ஆளாக இருந்து கொண்டு அனைவரும் செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். செல்போனில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கூட அதனை நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்து பார்த்தால்தான் நிம்மதி பெறுவாகிறார்கள். பலர் சாப்பிடும் நேரங்களில் கூட செல்போனை ஒதுக்கிவைத்து விட்டு சாப்பிடுவதில்லை. ஒரு கையில் சாப்பாடு என்றால் மறுகையில் செல்போன் என, செல்போன் அடிமையாக பலர் மாறியுள்ளனர்.
இந்நிலையில் செல்போனை அணைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்கு அமெரிக்க உணவகம் ஒன்று பீட்சாவை இலவசமாக வழங்குகிறது. குறைந்தது நான்கு பேர் உணவகத்திற்கு செல்லும்போது அவர்கள் அனைவரும் போனை அங்குள்ள லாக்கரில் வைத்து விட்டு, கைகளில் செல்போன் இல்லாமல் சாப்பிட தயாரானால் அவர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உணவகம் ஒன்றுதான் இந்தச் சேவையை வழங்குகிறது.
இதுகுறித்து உணவகம் தரப்பில் அதிகாரிகள் கூறும்போது, “ குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் ஒன்றாக வரும்போது செல்போனையே நோண்டாமல் நிம்மதியாக சாப்பிட வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அவர்கள், அவர்களுக்குள் நிறைய பேசிக்கொள்ள வேண்டும். அதற்காகதான் இந்த முறையை கையாள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
Loading More post
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!