ஆண்டிபட்டியில் அமமுக நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்தாக சோதனை நடைபெற்ற வளாகத்தில் இருந்த ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:- “ தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக நிர்வாகிக்கு சொந்தமான வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்று காலை 5.30 மணி வரை நீடித்தது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற இடத்தின் கீழ்தளத்தின் தான் அமமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
வருமான வரித்துறையினரின் சோதனையில் ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் அனைத்தும் 94 பாக்கெட்டுகளில், வார்டு எண் மற்றும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களுடன் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் என்ற வீதத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது. சோதனை நடைபெற்றபோது அங்கிருந்த ஒருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர் கூறும்போது, ஆண்டிபட்டி பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் வகையில் 2 கோடி ரூபாய் பணம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் அங்கு செல்ல முயன்றபோது அமமுக நிர்வாகிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஒருசில கட்டு பணத்துடன் அங்கிருந்து ஒருவர் தப்பிவிட்டார். மீதமுள்ள 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து ஒரு தபால் வாக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தபால் வாக்குச்சீட்டில் அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டு இருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!