Published : 20,Mar 2019 04:14 AM
''அடிச்சு தூக்கலாமா? எடுடா வண்டிய, போடுடா விசில'' - இம்ரான் தாஹிரின் கலக்கல் ட்வீட்!

உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வருவதாக சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ட்வீட் செய்துள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தென்னாப்ரிக்க சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு கலகலப்பை ஏற்படுத்துவார். தன் பந்துவீச்சில் விக்கெட்டை எடுத்துவிட்டு மைதானத்தையே ஒரு சுற்று ஓடி வரும் தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என சென்னை ரசிகர்கள் செல்லப்பெயரும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியே சென்னையில் தான் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சில நாட்களாக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வருவதாக பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர் ட்வீட் செய்துள்ளார். அதில் ''என் இனிய உடன்பிறப்புகளே நலமா? உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வரும் உங்கள் சகோதரன். அடிச்சு தூக்கலாமா? எடுடா வண்டிய, போடுடா விசில'' என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள அவர், ''சென்னையில் உள்ள சகோதர சகோதரிகளே.. போட்றா விசில... வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Yen iniya udan pirapugaley nalama ? Ungal anaivaraiyum sandikka avaludan varum ungal sagotharan.adichu thookalama @ChennaiIPL#eduda vandiya poduda whistle pic.twitter.com/HGpWVVreoD
— Imran Tahir (@ImranTahirSA) March 19, 2019