நாடு முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காதல் மனைவியின் இதயத்தை தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் ராஜ். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. கடந்த வாரம் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த கர்ப்பிணியான கோகிலாவுக்கு உடல்நிலை மோசமாகவே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
அறுவை சிகிச்சையில் கோகிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல்நிலை மோசமாக இருந்ததால் சிகிச்சை பலனில்லாமல் கோகிலா மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனைக் கேட்டு மன முடைந்த கோகிலாவின் கணவர் தன் மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு இதயம் தேவைப்பட, கோகிலாவின் இதயம் சென்னை கொண்டுவரப்பட்டு அந்த நபருக்கு பொருத்தப்பட்டது.
இது குறித்து பேசிய கோகிலாவின் கணவர், ''காதலர் தினத்தன்று என் காதல் மனைவி, அவள் இதயத்தை எனக்குத் தராமல் வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்'' என்று உருக்கமாக தெரிவித்தார்
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!