போலி ஆதார் அட்டைகளை தயாரித்து விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அசாம் மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் காபி தோட்டங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் இவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அசாம், வங்காளதேச தொழிலாளர்களின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அவர்களுக்கு போலியாக ஆதார் அட்டைகளை தயாரித்து ஒரு கும்பல் வழங்குவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் விராஜ்பேட்டை தாலுகா கோணிகொப்பா அருகே உள்ள தாரிகட்டே பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சிலர் போலி ஆதார் அட்டைகளை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து லத்தீப், நவீன், பிரசன்னா, குருபிரசாத், முன்னா, அக்பர் அலி, அசன் அலி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்