பிரதமர் மோடி, தங்களை சந்தித்துப் பேசும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் புதுமையான போராட்ட வடிவத்தை முன்னெடுத்து வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் பாதி தலைமுடியை மழித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் 21-வது நாளாக இன்றும் தொடர்கிறது. புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, ‘பிரதமர் மோடி தங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் அப்படி சந்திக்கவில்லை என்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்’ என்றும் கூறினார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!