சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறி இளைஞர் ஒருவரிடம் காவல்துறையினர் ரூ,2,000 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கும்பாலா பகுதியில் சைக்கிளில் சென்றபோது, கேரள காவல்துறையினர் அவரை வழிமறித்து சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததற்காக அபராதம் கட்டுமாறு கூறியுள்ளனர். மேலும் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி சைக்கிள் டயரை பஞ்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கேரள காவல்துறையினர் விதித்த ரூ.2,000 அபராதத்தை காசிம் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ரூ.500 மட்டும் ரசீது எழுதி, அதில் இருசக்கர வாகன எண்ணைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!