ஹைதராபாத் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிப்போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஹைதராபாத், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் டூபிளசிஸ் மட்டும் நிலைத்து ஆட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரெய்னா மட்டும் 22 (13) ரன்கள் எடுத்தார். இதையடுத்து 8வதாக களமிறங்கிய தாகூர் 5 பந்துகளில் 15 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதிவரை விளையாடிய டூபிளசிஸ் 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கடைசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற போது, முதல் பந்திலேயே 6 அடித்து டூபிளசிஸ் சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டுசென்றார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்